• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான கல்விமான்களின் சந்திப்பு

December 6, 2021 தண்டோரா குழு

நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான கல்விமான்களின் சந்திப்பு நடைபெற்றது. இருபது கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பா.அனிருதன் வரவேற்புரை நல்கினார்.நேரு கல்வி குழுமத்தின் முதன்மை கல்வி செயலர் முனைவர் P.K கிருஷ்ணகுமார் கல்விமான்களின் சந்திப்பிற்கு வாழ்த்துரை வழங்க இனிதே தொடங்கியது.கல்லூரி முதல்வர்கள் ஒருவரை ஒருவர் சந்திந்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

கல்லூரியின் சிறப்பான செயல்பாடுகள் குறித்த , நவீன வளர்ச்சிக்கான வழி முறைகள் தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்றது. தலைமைப் பண்பு என்பது பொறுப்புகளை தான் மட்டும் சுமப்பதல்ல மற்றவர்களுக்கு பகிர்வதோடு , அவர்களை தலைவர்களாக உருவாக்குகின்ற அரிய முயற்சியாகும். அவ்வகையில் சிறந்த குடிமகன்களாக புரிந்துணர்வு மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த சந்திப்பு நடைபெற்றது.

கல்லூரி முதல்வர்கள் கல்லூரிகளின் வளர்ச்சிக்கான ஒப்பந்தத்தில் உறுதி கையொப்பமிட்டனர். சாரதா கங்காதரன் கல்லூரியின் முதல்வர் முனைவர் K. உதயசூரியன் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் பள்ளி மற்றும் சமூக பணியில் துறை புலமுதன்மையர் முனைவர் மோ.கனகரத்தினம் நன்றியுரை வழங்கினார்.

மேலும் படிக்க