• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாகன விபத்து வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கமிஷனர் உத்தரவு

November 25, 2021 தண்டோரா குழு

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் இன்று போக்குவரத்து புலனாய்வு பிரிவு(கிழக்கு) காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மோட்டார் வாகன விபத்துகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், இறப்பு ஏற்படுத்தும் வாகன விபத்து வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

மேலும் வாகன விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்து வாகன விபத்தை குறைக்க தேவையான நடவடிக்கை, சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

மேலும் போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் போக்குவரத்து சிக்னல்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் படிக்க