கோவை தினத்தை முன்னிட்டு உக்கடம் பெரியகுளம் பகுதியில் வண்ணவிளக்குகள், பாடல்கள் ஓளிபரப்பபட்டு கொண்டாடப்பட்டது.
கோயமுத்தூர் மாவட்டம் 1804 ம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி ஆங்கிலேயர்களின் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்டது. மாவட்டம் உருவாக்கப்பட்ட தினம் கோவை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக இன்று 217 வது கோவை தினம் அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவை பெரியகுளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ” ஐ லவ் கோவை” என்ற வாசகம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் பாடல்களும் ஓளிபரப்பபட்டு கோவை தினம் கொண்டாடப்பட்டது. மாலை வேளையில் பெரிய குளம் பூங்காவிற்கு வந்த பொது மக்கள் இவற்றை ரசித்தனர்.
மேலும், மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்