• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆடு திருடியதாக தாக்கியதில் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முன்னாள் சிறைவாசி மரணம்

November 23, 2021 தண்டோரா குழு

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சேட் பக்ருதீன்.கோவை குண்டு சம்பவத்தில் முன்னாள் சிறைவாசி ஆவார். இவர் நேற்று முன் தினம் அப்பகுதியில் ஆடு திருடியாதாக கூறப்படுகிறது. இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த சிலர் அவரை பிடித்து அடித்ததாக தெரிகிறது.

இதனையடுத்து அவரை போத்தனூர் காவல் நிலையத்துக்கு சென்ற போது பக்ரூதீன் குடிபோதையில் இருந்ததால் அவரை நாளை அழைத்து வரும்படி கூறி போலிசார் அனுப்பி வைத்துள்ளனர்.இந்நிலையில்
நேற்று காலை பக்ரூதின் மூர்ச்சையாகி இருந்த நிலையில் இருந்ததால் அவரது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பக்ரூதீன் ஏற்கனவே உயிரிழந்ததை உறுதி படுத்தி உள்ளனர்.

இதனையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அவரது உறவினர்கள் நேற்று சிலர் தாக்கியதால் தான் உயிரிழந்திருக்க கூடும் என்றும் அவர்களை கைது செய்ய வலியுறித்தியும் போத்தனூர் காவல் நிலையம் முன் கூடியதால் பரப்பான சூழல் நிலவி வருகிறது.

இது குறித்து போத்தனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளவும் துவங்கியுள்ளனர் .
பிரேத பரிசோதனை அறிக்கையில் தாக்கியதால் தான் உயிரிழந்திருக்கிறார் என நிரூபணமாகினால் இது கொலை வழக்காக மாறக்கூடும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

மேலும் படிக்க