• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பேக்கரி ஒன்றில் வாங்கி திண்பண்டத்தில் புழு இருந்ததால் அதிர்ச்சி

November 19, 2021 தண்டோரா குழு

கோவையில் பேக்கரி ஒன்றில் வாங்கி திண்பண்டத்தில் புழு ஊறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் திவ்யா பேக்கரி செயல்பட்டு வருகிறது. இங்கு சென்ற வாடிக்கையாளர்கள் குழந்தைகளுக்கு கொடுக்க Munch Nuts என்ற பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சாக்லேட் ஒன்றை வாங்கினர். 10 ரூபாய் மதிப்புள்ள அந்த சாக்லேட்டை பிரித்து பார்த்த போது அந்த சாக்லேட் முழுவதும் புழு ஊறியுள்ளது. இதை பார்த்ததும் வாடிக்கையாளர்களுக்கு தூக்கிவாரிப்போட்டது.

தொடர்ந்து இது குறித்து பேக்கரி நிர்வகத்திடம் கேள்வி எழுப்பியபோது “தெரியாமல் நடந்துவிட்டது” என்று மழுப்பலான பதிலை கொடுத்துள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் அந்த சாக்லேட்டை வீடியோ பதிவு செய்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் சூழலில், பெரு முதலாளிகள் அலட்சியமாக செயல்பட்டு வருவதை உணவு பாதுகாப்புத்துறை கண்டித்து களையெடுக்குமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க