• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநகராட்சி பகுதிகளில் 2 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிப்பு

November 16, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி பகுதிகளில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 2 நபர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து பொதுமக்களும் தங்கள் வீட்டினை விட்டு வெளியே செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும். மழைக்காலம் என்பதால் கோவை மாநகராட்சி பகுதியில் தினந்தோறும் 14 சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க