• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, பொது மக்கள் வெளியே வர வேண்டாம் – தமிழக அரசு

December 12, 2016 தண்டோரா குழு

வர்தா புயல் காரணமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, பொது மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கருதி 4 மாவட்டங்களில் 4௦௦௦க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சென்னைக்கு அருகே மையம் கொண்டுள்ள வர்தா புயல் தற்போது (டிசம்பர் 12) கரையை கடந்துக்கொண்டிருக்கிறது. சென்னையில் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடல்சீற்றம் தொடர்ந்து அதிகரித்துள்ளதால் கடலூர், புதுச்சேரியில் கடற்கரையோர சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பழவேற்காடு மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இந்த புயல் கரையை கடக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி சென்னை, கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களிலும் கடலோரம் வசிக்கும் 4622 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனிடையே வர்தா புயல் அபாயம் நீங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

புயல் மற்றும் கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில், சென்னை எழிலகத்தில் விரிவான ஆலோசனை திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேசியதாவது;

வர்தா புயலால் பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், மேடான மற்றும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும், புயல் கரையைக் கடந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, மக்கள் வெளியே வர வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க