• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வந்த ரயிலில் கடத்தி வரப்பட்ட 23.5 கிலோ கஞ்சா பறிமுதல்

October 26, 2021 தண்டோரா குழு

தன்பாத்தில் இருந்து கோவை வந்த
ரயிலில் கடத்தி வரப்பட்ட 23.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கோவை வழியாக ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 9 மணிக்கு கோவை ரயில் நிலையத்துக்கு வந்தது. போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயிலில் ஒவ்வொரு பெட்டியாக ஏறி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது எஸ்4 பெட்டியில் சீட்டுக்கு அடியில் மறைத்து மூட்டையில் கடத்தி வரப்பட்ட 16.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் ரயில்வே எஸ்பி இளங்கோவுக்கு அதே ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரயில்வே டிஎஸ்பி யாஸ்மின் தலைமையிலான போலீசார் அந்த பெட்டியில் சோதனை செய்தனர்.

அப்போது இருக்கைக்கு அடியில் மூட்டையில் மறைத்து கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரயிலில் கடத்தி வரப்பட்ட 23.5 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் சோதனை செய்ய வருவதை அறிந்த மர்ம நபர்கள் கஞ்சாவை ரயில் பெட்டியில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் ரயில்வே வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் சந்தேக நபர்களின் நடமாட்டம் உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க