• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நடந்த ஐவர் கால் பந்தாட்ட போட்டியில் வென்ற பி ஜூஸ் அணி

October 25, 2021 தண்டோரா குழு

கலைஞர் கோப்பைக்கான கோவையில் நடந்த ஐவர் கால் பந்தாட்ட போட்டியில் திருவனந்தபுரம் பி ஜூஸ் அணி ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் கோப்பையை தட்டிச் சென்றது..

கோவை திமுக கிழக்கு மாநகர் மாணவரணி சார்பில் சிங்காநல்லூர் பகுதியில் கலைஞர் கோப்பை ஐவர் கால்பந்தாட்ட போட்டி நடத்தப்பட்டது.இந்த போட்டியில் தென் இந்தியாவைச் சேர்ந்த 78 அணிகள் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதி நாளான இன்று நடந்த கடுமையான போட்டியில் திருவனந்தபுரம் பிஜூஸ் அணி கோப்பையை தட்டிச் சென்றது.

இந்திய ஜூனியர் அணி வீரர் ரீகன் பங்கேற்ற காரைக்குடி மணி இரண்டாம் இடத்தை பிடித்தது. முதலிடம் பிடித்த திருவனந்தபுரம் பிஜுஸ் அணிக்கு கோவை கிழக்கு மாநகர திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் கோப்பையை பரிசாக பரிசளித்தார். மேலும் இரண்டாவது இடம் பிடித்த காரைக்குடி அணிக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுத் தொகையுடன் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுகவினர், திமுக மாணவரணி அமைப்பினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

மேலும் படிக்க