• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செல்போன் விளையாட்டை தந்தை கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை

October 18, 2021 தண்டோரா குழு

கோவையில் செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரத்தினபுரி சுப்பம்மாள் நகரை சேர்ந்தவர் சுதாகர்(41). கூலி தொழிலாளி. இவரது மகள் ஹரிணி(16). ராம்நகரில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். சுதாகர் தனது மகளுக்கு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க புதிய ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்தார். ஆனால் ஹரிணி படிப்பில் கவனம் செலுத்தாமல் நீண்ட நேரம் செல்போன் விளையாட்டில் கவனம் செலுத்தி வந்ததாக தெரிகிறது.

இதைப்பார்த்த சுதாகர் தனது மகளை கண்டித்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த ஹரிணி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க