• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கன மழை

October 16, 2021 தண்டோரா குழு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களுக்கு மழை அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் கோவையில் மதிய நேரத்தில் திடீரென ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித் தீர்த்த கன மழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

சுமார் ஒரு மணி அளவில் திடீரென வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக காந்திபுரம்.,சிவானந்தா காலனி., வடகோவை., உக்கடம்., போத்தனூர்., சுந்தராபுரம்., ஆர்.எஸ்.புரம்., சிங்காநல்லூர்.,துடியலூர்.,தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

இடைவெளி இல்லாமல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மதிய நேரமான ஒரு மணி அளவிலேயே மாலை 6 மணி போன்று இருட்டாக காணப்பட்டது மழை அதிகரித்ததன் காரணமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் முகப்பு விளக்குகளை தெரிவித்த வண்ணம் பயணம் மேற்கொண்டனர் குறிப்பாக காந்திபுரம் சிவானந்தா காலனி போன்ற பகுதிகளில் வாகன நெரிசல் அதிகமாகவே காணப்பட்டது.

இருப்பினும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மழையில் நனைந்தபடியே பயணம் மேற்கொண்டனர் கடந்த இரண்டு வார காலமாகவே திடீரென விட்டு விட்டு பெய்து வந்த கனமழை மற்றும் சாரல் மழை திடீரென இன்று பலத்த மழையாக கோவையில் கொட்டித் தீர்த்தது இதனால் சாலை எங்கும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க