வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களுக்கு மழை அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் கோவையில் மதிய நேரத்தில் திடீரென ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித் தீர்த்த கன மழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
சுமார் ஒரு மணி அளவில் திடீரென வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக காந்திபுரம்.,சிவானந்தா காலனி., வடகோவை., உக்கடம்., போத்தனூர்., சுந்தராபுரம்., ஆர்.எஸ்.புரம்., சிங்காநல்லூர்.,துடியலூர்.,தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
இடைவெளி இல்லாமல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மதிய நேரமான ஒரு மணி அளவிலேயே மாலை 6 மணி போன்று இருட்டாக காணப்பட்டது மழை அதிகரித்ததன் காரணமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் முகப்பு விளக்குகளை தெரிவித்த வண்ணம் பயணம் மேற்கொண்டனர் குறிப்பாக காந்திபுரம் சிவானந்தா காலனி போன்ற பகுதிகளில் வாகன நெரிசல் அதிகமாகவே காணப்பட்டது.
இருப்பினும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மழையில் நனைந்தபடியே பயணம் மேற்கொண்டனர் கடந்த இரண்டு வார காலமாகவே திடீரென விட்டு விட்டு பெய்து வந்த கனமழை மற்றும் சாரல் மழை திடீரென இன்று பலத்த மழையாக கோவையில் கொட்டித் தீர்த்தது இதனால் சாலை எங்கும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு