• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவையில் 13 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை அளித்த நபர் போக்சோ சட்டத்தில் கைது !

October 11, 2021 தண்டோரா குழு

கோவையில் 13 வயது சிறுமியை கடத்தி வந்து திருமணம் செய்து பாலியல் தொல்லை அளித்த நபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் கட்டிட தொழிலாளி இவர் அதே மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் ஒரே வீட்டில் 3 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் அந்த பெண்ணின் 13 வயது சிறுமியை ஆசைவார்த்தைகள் கூறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவைக்கு கடத்தி வந்த வெற்றிவேல் திருமணம் செய்துகொண்டு அந்த சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்ததாக தெரிகிறது இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு குடிபோதையில் வந்த வெற்றிவேல் சிறுமியை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் மனவேதனை அடைந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது இதையடுத்து அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் சம்பவம் தொடர்பாக காக்கா சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் விசாரித்தபோது அவருக்கு 13 வயது என்பது தெரியவந்தது மேலும் வேலூரில் இருந்து அவரது தாய்க்கு தெரியாமல் கடத்தி வந்து திருமணம் செய்து பாலியல் தொல்லை அளித்து வந்ததும் தெரியவந்தது.

ஏற்கனவே சிறுமி மாயமானதாக வேலூரில் அவரது தாயார் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் சிறுமியை கோவைக்கு கடத்தி வந்து திருமணம் செய்ததோடு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்துவந்து கொலை மிரட்டல் விடுத்து வந்த வெற்றிவேலை போலீசார் குழந்தை திருமணம் கடத்தல் கொலை மிரட்டல் மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட வெற்றிவேலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க