• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு ஆட்சியர் அணிவித்த காலனியை கொடுக்காமல் இழுத்தடிக்கும் அதிகாரிகள்

October 11, 2021 தண்டோரா குழு

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு ஆட்சியர் அணிவித்த காலனியை கொடுக்காமல் அதிகாரிகள் இழுத்தடிப்பதாக சிறுவனின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.

கோவை போத்தனூரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான வேல்முருகன். அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த இரு மாதங்களுக்கு முன் தமிழக அரசின் இலவச வீடு வேண்டி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க குடும்பத்துடன் வந்திருந்தார். அப்போது வேல்முருகனின் மாற்றுத்திறனாளியான மகனுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட காலனிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் சிறுவனுக்கு அணிவித்து மகிழ்ந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்நிலையில் ஆட்சியர் அணிவித்த நிகழ்வு முடிந்ததும், காலனியை பழுதுபார்க்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் திரும்ப பெற்று கொண்டதாகவும், அதிகாரிகளிடம் கேட்டபோதும், காலனியை கொடுக்காமல் இரண்டு மாதமாக இழுத்தடித்து வருவதாக வேதனை தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளர் நலத்துறை அதிகாரிகளின் இந்த செயலில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மகனுக்கு காலனிகளை பெற்று தர வேண்டுமென பணிவுடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க