• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்களை 17ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் ஆட்சியர் உத்தரவு

October 11, 2021 தண்டோரா குழு

கோவையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்களை, 17ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் படியும், தலைமைச் செயலாளரின் அறிவுறுத்தலின்படியும், கோவை மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி சாலைகள், உள்ளாட்சி அமைப்புக்கு சொந்தமான சாலைகள், நடைபாதைகள் ஆகிய இடங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்கள், பிளக்ஸ் பலகைகள்,கொடிக் கம்பங்கள் ஆகியவற்றை அகற்றுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இதில், தனி நபர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர்களால் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்கள் உள்ளிட்டவற்றை வரும் 17ம் தேதிக்குள் அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் வருவாய்த்துறையினர் மூலம் அகற்றப்படும். அதற்கான செலவுத் தொகை சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்பினரிடம் இருந்து வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க