• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடிமை பணிக்கான முதனிலை தேர்வு தொடர்பாக ஆலோசனை கூட்டம்

October 9, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வரும் (10ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை குடிமை பணிக்கான முதனிலை தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வினை 25 மையங்களில் 10 ஆயிரத்து 955 நபர்கள் எழுதுகிறார்கள்.

இதற்கான முன் ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் முன்னிலையில், தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநனரும் கோவை மாவட்ட தேர்வு பார்வையாளருமான பிரகாஷ் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இத்தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் துணை ஆட்சியர் நிலையில் எட்டு உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்களும், வட்டாட்சியர் நிலையில் 25 தேர்வு மையங்களுக்கும் தலா ஒரு தேர்வு மைய ஆய்வு அலுவலர்களும், துணை வட்டாட்சியர் நிலையில் 46 தேர்வு மைய துணை கண்காணிப்பாளர்களும், 931 அறை கண்காணிப்பாளர்களும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தேர்வையினை பார்வையிடும் பொருட்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் சார்பு செயலர் நிலையில் ஒருவரும், தமிழக அரசின் சார்பில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை கமிஷனர் வெங்கடேஷ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் பிரகாஷ் ஆகியோர் சிறப்பு பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க