• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘லவ் பேர்ட்ஸ்’ பறந்து சென்றதால் இளம்பெண் தற்கொலை

October 8, 2021 தண்டோரா குழு

கோவையில் ஆசையாக வளர்த்த ‘லவ் பேர்ட்ஸ்’ பறந்து சென்றதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அருகே உள்ள வெள்ளமடை தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன்(46). விவசாயி. இவரது மகள் பிரியா(18). பள்ளிப்படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர் தனது வீட்டில் கூண்டு வைத்து அதில் ஆசையாக ‘லவ் பேர்ட்ஸ்’ வளர்த்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் கூண்டில் இருந்த லவ் பேர்ட்ஸ் பறந்து சென்றது.

ஆசையாக வளர்த்த பறவைகள் பறந்து சென்றதால் பிரியா மன வேதனை அடைந்தார். இதனால் அவரது பெற்றோரிடம் வேறொரு லவ் பேர்ட்ஸ் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சல் அடைந்த பிரியா வாழ்க்கையில் விரக்தியடைந்து நேற்று வீட்டில் விஷம் குடித்தார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லவ் பேர்ட்ஸ் பறந்து சென்றதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க