• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவில்களை திறக்க வலியுறுத்தியும் திமுக அரசை கண்டித்தும் பாஜகவினர் தீ சட்டிகளுடன் ஆர்ப்பாட்டம்

October 7, 2021 தண்டோரா குழு

அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்க வலியுறுத்திம் திமுக அரசை கண்டித்தும் கோவையில் பாஜகவினர் தீ சட்டிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரொனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக வாரங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை களில் கோவில்களில் பக்தர்களுக்கு தடை விதித்துள்ளது.மேலும் விஷேச நாட்களிலும் கோவில்களில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்க வலியுறுத்தி கோவை தண்டு கோவில் அருகில் 200க்கும் மேற்ப்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் தீச்சட்டி ஏந்தியும் குளவை போட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் டாஸ்மாக் திறக்க அனுமதி பள்ளிகள் அனுமதி ஆனால் கோவில்களை திறக்க மட்டும் தடையா போன்ற பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர். இதில் மேடை அமைத்து காளி நடனம் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

மேலும் படிக்க