• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சவர தொழிலாளி படுகொலைக்கு நீதி வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் வீரத்தியாகி விஸ்வதாஸ் தொழிலாளர் கட்சியினர் மனு

October 6, 2021 தண்டோரா குழு

குறிப்பிட்ட சமூகத்தினருக்கு முடி திருத்திய சவர தொழிலாளி படுகொலை நீதி வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் வீரத்தியாகி விஸ்வதாஸ் தொழிலாளர் கட்சியினர் மனு அளித்தனர்.

சேலத்தில் சவரத்தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தகுந்த நீதி வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரத்தியாகி விஸ்வநாதஸ் தொழிலாளர்கள் கட்சியின் சார்பாக மனு வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில் வழங்கப்பட்ட மனுவில்,சேலம் மாவட்டம் வீரப்பன் ஊர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்த முத்துச்சாமி,செல்லம்மாள் தம்பதியரின் மகனான முத்துவேல் என்பவர் முடி திருத்தும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததாகவும்,இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தினருக்கு முடி திருத்தியதாக கூறி அவரை அடித்து படுகொலை செய்யப்பட்டதாகவும்,எனவே படுகொலை செய்யப்பட்ட முத்துவேல் குடும்பத்தினருக்கும் தகுந்த நீதி வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

மனு வழங்கிய போது மாநில மனித உரிமை பிரிவு கழகதலைவர் மணிவண்ணன்,மாநில இணைச்செயலாளர் மகேஸ்வரன், கோவை மாவட்ட செயலாளர் மோகன்ராஜ்,அமைப்பாளர் ராமகிருஷ்ணன்,தொண்டர் அணி தலைவர் ராஜேந்திரன்,பிரதிநிதி கருப்புசாமி,இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ் குமார், துணை அமைப்பாளர் மில்லர் மதன்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க