• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்களை தேடி மருத்துவ திட்டம் பயனாளிகளின் வீட்டிற்கு சென்று மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

October 5, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட கணபதி பகுதியிலுள்ள காந்தி மாநகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், துடியலூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் போன்றவை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறும் நபர்களின் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, மருந்து மாத்திரைகள் வழங்கப்படும் முறைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார், வடக்கு மண்டல உதவி கமிஷனர் மோகனசுந்தரி உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க