• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

மக்களை தேடி மருத்துவ திட்டம் பயனாளிகளின் வீட்டிற்கு சென்று மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

October 5, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட கணபதி பகுதியிலுள்ள காந்தி மாநகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், துடியலூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் போன்றவை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறும் நபர்களின் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, மருந்து மாத்திரைகள் வழங்கப்படும் முறைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார், வடக்கு மண்டல உதவி கமிஷனர் மோகனசுந்தரி உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க