• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உள்ளாட்சி தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் விடுமுறை

October 5, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் அன்னூர், ஆனைமலை, பொள்ளாச்சி,காரமடை, கிணத்துகடவு, மதுக்கரை,பெரியநாயக்கன்பாளையம், சர்க்கார் சாமக்குளம்,சுல்தான்பேட்டை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்,ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இதனை அடுத்து இப்பகுதிகளில் தேர்தல் நடைபெறும் இடங்களில் வரும் 7ம் தேதி காலை 10 மணி முதல் 9ம் தேதி இரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 12ம் தேதியும் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் அனைத்து டாஸ்மாக் கடைகள், அனைத்து பொழுதுபோக்கு மனமகிழ்மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை விடுமுறை அளிக்கப்படுகிறது.

விதிமுறைகளுக்கு முரணாக அன்றைய தினங்களில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க