• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு புத்துயிர் பெற்ற காந்தியின் அஸ்தி கலச நினைவுத்தூண்

October 2, 2021 தண்டோரா குழு

கோவையில் பராமரிப்பின்றி இருந்த மகாத்மா காந்தியின் அஸ்தி கலச நினைவுத்தூண் கொண்ட இடம் 10 ஆண்டுகளுக்கு பிறகு புத்துயிர் பெறுகிறது.

கோவை பேரூர் காஞ்சிமா நதிக்கரையில் மகாத்மா காந்தி, காமராஜர், லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோரின் அஸ்தி கலசம் வைக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து காமராஜரின் அஸ்தியும், டெல்லியிலிருந்து காந்தி, ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர்களின் அஸ்திகளும் கொண்டு வரப்பட்டு கோவையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

முன்னாள் எம்.எல்.ஏ. எல்.எம்.நாயடு தலைமையில் மேற்கொண்ட முயற்சி ஆண்டுதோறும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளை முன்னிட்டு, சர்வோதயா தினமாக இவர்களின் அஸ்திக்கு மரியாதை செலுத்தப்பட்டு வந்தது.இடையில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து இருந்த 3 தலைவர்களின் நினைவுத்தூணாக அஸ்திகள் கொண்ட இந்த இடம் 10 ஆண்டுகளுக்கு பிறகு புத்துயிர் பெறுகிறது.

காமராஜர் மக்கள் இயக்கத்தின் சார்பில் தொடர் முயற்சியால் தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், அஸ்தி கலசம் கொண்ட இடத்தில் மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. 153 வது காந்தி பிறந்தநாள், முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள், காமராஜரின் நினைவு நாள் என ஒப்பற்ற தலைவர்களுடைய சிறப்பு கொண்ட நாளான இன்று, அஸ்தி கலசம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் படிக்க