• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள்

October 2, 2021 தண்டோரா குழு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கோவை வீரகேரளம் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அண்ணல் மகாத்மாகாந்தி பிறந்த தினத்தை காந்தி ஜெயந்தி விழாவாக நாடு முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரகேரளம் பகுதியில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

முன்னதாக விழாவில் தேசிய கொடியேற்றி, பின்னர் தேசத்திற்காக உழைத்த காங்கிரஸ் பேரியக்க தியாகிகளுக்கு வீர வணக்கம் செய்யப்பட்டது.தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்குதல், அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் அழகு ஜெயபால்,மகேஷ் குமார்,கணபதி சிவக்குமார், சௌந்தரகுமார், விஜயகுமார்,பழயூர் செல்வராஜ் மற்றும் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க