• Download mobile app
11 Feb 2026, WednesdayEdition - 3654
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பணி ஒய்வு விழா

September 30, 2021 தண்டோரா குழு

கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் சிறப்பு நிலை அலுவலக உதவியாளராக 27 ஆண்டுகளாக பாலசுப்பிரமணியம் பணியாற்றி வந்தார். வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெற்றார்.

இவரின் பணி ஓய்வு நிறைவு விழா பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் துணைப்பதிவாளர் இயக்குநர் பத்மினி தலைமையேற்று நடத்தி வைத்தார். இவ்விழாவில் பயிற்சி நிலையத்தின் முதல்வர் ஸ்ரீதர், கூட்டுறவு ஒன்றியத்தின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், துணைப்பதிவாளர் கிருஷ்ணன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை நிர்வாக அலுவலர் பிராங்கிளின் தாமஸ் ஆகியோர் பாலசுப்பிரமணியத்திற்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் படிக்க