• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தண்ணீர் தொட்டிகளை கொசுக்கள் புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும் – மாநகராட்சி கமிஷனர் அறிவுரை

September 29, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் கொரோனா தடுப்புப்பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் 8வது வார்டுக்குட்பட்ட கவுண்டம்பாளையம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் முன்களப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின், அவர் முன்களப்பணியாளர்களிடம் கூறியதாவது:

வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி உள்ளவர்களை கண்டறியும்போது, வீட்டிலுள்ள அனைவரையும் பரிசோதனை செய்ய வேண்டும். கொசுவினால் ஏற்படும் டெங்கு போன்ற நோய்களை தடுப்பதற்காக பொதுமக்களிடம் வீடுகளில் உபயோகமற்ற பொருட்கள், பயனற்ற பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை கொசுக்கள் புகாவண்ணம் மூடி வைக்க வேண்டும். இது தொடர்பாக பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து சேரன் நகர் பகுதியில் 6 லட்சம் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து விநியோகப்படும் குடிநீர் பணிகள் குறித்து பார்வையிட்டார். கிருஷ்ணம்பதி குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளையும் பார்வையிட்டார்.

மேலும் படிக்க