• Download mobile app
11 Feb 2026, WednesdayEdition - 3654
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

7 வருடங்களாக வாடகை செலுத்தாத 15 கடைகளுக்கு பூட்டு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

September 29, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட தொட்டராயன் கோவில் வீதி மாநகராட்சி வணிக வளாகத்தில் 63 கடைகள் உள்ளது. இதில் சில கடைகள் கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக மாதாந்திர வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தனர்.

மாநகராட்சி கமிஷனர் உத்தரவின்படி உதவி கமிஷனர் (வருவாய்) செந்தில்குமார் ரத்தினம், உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமார், சிறப்பு வரி ஆய்வாளர் மணிகண்டன், சிறப்பு வரி ஆய்வாளர் உள்ளிட்டோர் இணைந்து அந்த வணிக வளாகத்தில் ஆய்வு செய்தனர். அப்போது நீண்ட வருடங்களாக கடை வாடகை செலுத்தாமல் இருந்த 15 கடைகளை பூட்டி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த 15 கடைகளுக்கும் ரூ.17.03 லட்சம் வாடகை நிலுவை தொகை உள்ளது. இந்த நிலுவை தொகையினை உடனடியாக செலுத்தும் பட்சத்தில் மாநகராட்சியால் இக்கடைகள் திறந்து விடப்படும் என மாநகராட்சி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க