• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வால்பாறை வனச் சரகருக்கு ஜாமீன்

September 26, 2021 தண்டோரா குழு

வால்பாறையில் தங்கும் விடுதியில் தங்கியிருந்த உயா்நீதிமன்ற நீதிபதி மகனிடம் தகராறு செய்ததாக கைதான வனச் சரகருக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வால்பாறை வனச் சரக கட்டுப்பாட்டில் உள்ள சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த 21ஆம் தேதி, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியின் மகன் மற்றும் அவரது நண்பா்கள் தங்கி இருந்தனா். அன்றிரவு, அப்பகுதிக்கு ரோந்து சென்ற வால்பாறை வனச் சரகா் ஜெயசந்திரன் (35) அவா்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடா்பாக, வால்பாறை குற்றவியல் நீதிமன்ற தலைமை எழுத்தா் மனோகரன் அளித்த புகாரின்பேரில், வால்பாறை போலீஸாா் வனச் சரகா் ஜெயசந்திரனை வியாழக்கிழமை கைது செய்தனா்.

இதைக் கண்டித்து, வனத் துறையினா் 2 நாள்களாக தொடா்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனா். மேலும், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனத் துறையினா் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கோவை மாஜிஸ்திரேட் 1ஆவது நீதிமன்றத்தில் ஜெயசந்திரன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவின் மீதான விசாரணை சனிக்கிழமை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.

மேலும் படிக்க