• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அமரர் ஊர்தியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து.!

September 25, 2021 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இலவச அமரர் ஊர்தியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

கோவை அரசு மருத்துவமனையின் பிணவறைக்கு வரும் உடல்கள் இலவச அமரர் ஊர்தி மூலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.இதனால் இந்த ஊர்திகள் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படுவது வழக்கம். இப்படி மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிணவறை அருகே நிறுத்தப்பட்டிருந்த அமரர் ஊர்தி நேற்று நள்ளிரவு திடீரென தீப்பற்றி எரிந்தது.

பின்னர் அப்பகுதியில் இருந்தவர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். பின்னர் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.மேலும் பந்தய சாலை போலீசார் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தீ பற்றும் போது அருகிலிருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டதால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது.

மேலும் படிக்க