• Download mobile app
13 Jun 2026, SaturdayEdition - 3776
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

September 24, 2021 தண்டோரா குழு

கோவையில் கடந்த சில மாதங்களாக சாலையோரங்களிலும், வீடுகளுக்கு வெளியேவும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்தன.

இதையடுத்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில் கோவை முத்தண்ணன் குளக்கரையில் ஆர்.எஸ்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில், மாநகர் பகுதியில் அவர்கள் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் செல்வபுரத்தை சேர்ந்த அரவிந்த் என்கிற அசாருதீன் (28), பட்டிணத்த்தை சேர்ந்த கார்த்திக் என்கிற ரஞ்சித்குமார் (26), குனியமுத்தூரை சேர்ந்த முகமது சாதிக் (24) என்பது தெரியவந்தது.

இவர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 12 இருசக்கர வாகனங்களை மீட்டனர்.

மேலும் படிக்க