• Download mobile app
13 Jun 2026, SaturdayEdition - 3776
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநகராட்சியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வரிவசூல் பணிகள் பாதிப்பதாக மக்கள் புகார்

September 24, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் புதிய மென்பொருள் ஒருங்கிணைப்பு பணிகள் நிறைவடைந்து வரி வசூல்,குடிநீர் கட்டணம் செலுத்தும் பணிகள் துவங்கிய நிலையில் மீண்டும் மென்பொருள் பணிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வரி வசூல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கோவை மாநகராட்சியில் யூ.டி.ஐ.எஸ் எனப்படும் புதிய மென்பொருள் ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஆகஸ்ட் 9 முதல் 15 ஆம் தேதி வரை வரி வசூல் பணிகள் நிறுத்தப்படுவதாக, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, அனைத்து விதமான வரிவசூல் பணிகள், புதிய சொத்துவரி விதிப்பு, புதிய குடிநீர் இணைப்பு,வணிக உரிமம் தொடர்பான சேவைகள்,சொத்துவரி கட்டணம், குடிநீர் கட்டணம் செலுத்தும் இணையதள வசதிகளும் அந்த நாட்களில் செயல்படாது என தெரிவிக்கப்பட்டது. இதனால், மக்கள் அவதி அடைந்தனர்.

அதன் பின்னர் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் அனைத்து பணிகளும் துவங்கின. இதனிடையே மென்பொருள் ஒருங்கிணைப்பு பணிகளுக்கு பிறகு அவ்வபொழுது ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் வரி வசூல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுகிறது என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மாநகராட்சி நிர்வாகம் இப்பிரச்சனை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க