• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கார் டிரைவர் போக்சோவில் கைது

September 22, 2021 தண்டோரா குழு

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் காட்வின் என்கிற ஜெபமணி (வயது 39). இவர் மதுக்கரையில் தங்கியிருந்து கார் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு, 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்படுகிறது. இதில் அவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறார்.

இதனிடையே அந்த சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மருத்துவரிடம் சிறுமியை அழைத்து சென்று காண்பித்துள்ளனர்.பரிசோதனையின் போது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் கார் டிரைவர் காட்வினை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேலும் படிக்க