• Download mobile app
11 Jul 2025, FridayEdition - 3439
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு விருது

September 20, 2021 தண்டோரா குழு

கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மத்திய அரசு சார்பில் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக சிறந்த மருத்துவமனைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பிரத்யேக மருத்துவமனையாக இஎஸ்ஐ மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. நோயாளிகளுக்கு இங்கு அளிக்கப்பட்ட சிறந்த சிகிச்சை, கவனிப்பு, உணவு முறைகளால் மத்திய, மாநில அரசுகள் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பாராட்டி விருது வழங்கின. உள்ளூர் நோயாளிகள் மட்டுமின்றி பிற மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளும் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தனர்.

இதனிடையே கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக சிறந்த மருத்துவமனைக்கான மத்திய அரசு விருது இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இஎஸ்ஐ மருத்துவமனை கண்காணிப்பாளர் ரவிக்குமார் கூறியதாவது:

கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட இஎஸ்ஐ மருத்துவமனைகளில் தமிழகத்தில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனை, சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனை இரண்டும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் விருது வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

கொரோனா நோய்த் தொற்றால் நேரில் பங்கேற்க முடியாத நிலையில் விருதுகள் மருத்துவமனைக்கு விருது அனுப்பிவைக்கப்படும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சையுடன் தற்போது அனைத்து வித சிகிச்சைகளும் முழுமையாக அளிக்கப்பட்டு வருகிறது.எனவே இஎஸ்ஐ அட்டைதாரர்கள் எப்போதும்போல் அனைத்து விதமான சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகளையும் மேற்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க