• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொடிசியா சார்பில் தொழில் திறன் பழகுநர் பயிற்சி வழங்கும் முகாம்

September 18, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட திறன் பயிற்சி மைய அலுவலகத்துடன் இணைந்து கொடிசியா சார்பில் தொழில் திறன் பழகுநர் பயிற்சி வழங்கும் முகாம் கோவை தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு கூறியதாவது:

குறைந்தபட்ச கல்வி தகுதியாக 10ம் வகுப்பு படித்திருக்கும் அனைவரும் பயன்பெறும் வகையில் நடைபெற்ற இந்த முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கப்பட உள்ளது. அதன் பிறகு கொடிசியாவின் உறுப்பினர்களாக உள்ள தொழிற்சாலைகளில் தொழிற் பழகுநர் பயிற்சியாக ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்கு பணி வழங்கப்படும்.

பயிற்சி பெறுவோருக்கு மெஷினிஸ்ட், பிட்டர், சிஎன்சி புரோகிராமிங் மற்றும் ஆப்ரேட்டர் ஆகிய மூன்றில் ஒரு பயிற்சி தகுதிக்கேற்ப தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படும். இந்த தொழிற் பழகுநர் பயிற்சி பெறும் காலத்தில் பயிற்சி பெறுவோருக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

இந்த பயிற்சிகளில் தேர்ச்சி பெறுவோருக்கு தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் வைத்திருப்பவர்கள் நமது நாட்டில் மட்டுமின்றி அயல்நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளிலும் பணிபுரிய முடியும். இந்த பயிற்சி முகாமில் 10 மற்றும் 12 வகுப்பு முடித்தவர்கள் பட்டதாரிகள், முதுநிலை பட்ட படிப்பை தொடராதவர்கள் என பலரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அடுத்த தொழில் திறன் பழகுநர் பயிற்சி முகாம் வரும் 26ம் தேதி கோவை தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க