தந்தை பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக அறிவித்தத்தை தொடர்ந்து அவரது 143 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் தலைமையில் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்
சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.
தமிழக அரசு பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக சட்ட பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து, இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்களிலும், அரசு அலுவலகளிலும் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் சமூக நீதி உறுதி மொழி ஏற்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், சமூக நீதி நாள் உறுதி ஏற்பு வாசகங்களை வாசிக்க, கூடியிருந்த நுற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்து கொள்வேன் என்றும் மானுட பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும் எனவும் சமூக நீதியே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த சமூக நீதி நாளில் உறுதி ஏற்கின்றேன் என அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு