• Download mobile app
23 Jun 2025, MondayEdition - 3421
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை நகர் முழுவதும் செ.ம.வேலுச்சாமி பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு !

September 15, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட அதிமுகவின் மூத்த உறுப்பினராக இருப்பவர் செ.ம.வேலுச்சாமி. எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் இருக்கும் அவர் அமைச்சராகவும், கோவை மாநகர மேயராகவும்,கட்சியின் மாவட்ட செயலாளராகவும் இருந்தவர்.

சமீப காலமாக அவருக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் கொடுக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இன்று அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கோவை நகர் முழுவதும் செ.ம.வேலுச்சாமி பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிறிய அளவிலான படங்கள் மட்டும் இடம் பெற்றுள்ளது.

அதே வேளையில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என கட்சியின்பெயரை குறிப்பிடாமல் முன்னாள் அமைச்சர், மேயர் என்று மட்டும் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த சுவரொட்டியில் அண்ணாவின் கொள்கைகளை தன்னலமில்லாமல் வழிநடத்துபவர் வழி நடப்போம் என வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளது.

மேலும் அதிமுகவின் சார்பில் கட்சி அலுவலகத்தில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழாவிலும் செ.ம.வேலுச்சாமி பங்கேற்கவில்லை.அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகியான செ.ம.வேலுச்சாமி பெயரில், அதிமுக பெயரை தவிர்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க