• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் 7522 பேர் பயனடைந்துள்ளனர்

September 13, 2021 தண்டோரா குழு

மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் இதுவரை 7522 பேர் பயனடைந்துள்ளனர்.

மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் 45 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான மருந்துகளை களப்பணியாளர்கள் நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று வழங்கி வருகிறார்கள்.

மேலும் நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவச் சேவைகள், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து சுகாதார தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கோவை மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் ஆனைமலை வட்டாரத்தில் உள்ள 10 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் இதுவரை 4284 பயனாளிகளும், மாநகராட்சியில் 5 நகர்புற ஆரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் 3238 பேரும் பயனடைந்துள்ளார்கள்.

மேலும் படிக்க