• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சத்தியமங்களம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரிக்கு சிறந்த தூய்மை வளாக விருது (முதல் பரிசு)

September 13, 2021 தண்டோரா குழு

சத்தியமங்களம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரிக்கு மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) சிறந்த தூய்மை வளாக விருதை வழங்கியுள்ளது.

மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தூய்மையை பராமரித்து வரும் சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்து தூய்மை வளாக விருதினை வழங்கி வருகிறது.

அந்த வகையில் 2020-ம் ஆண்டு நடத்திய ஆய்வின் மூலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரிக்கு தூய்மையினை பராமரித்து வருவதற்கான முதல் பரிசு வழங்கப்பட்டது.

சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதார் தூய்மை வளாக விருதினை கல்லூரிக்கு வழங்கினார். இவ்விருது புதுமையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தூய்மையான வளாகத்தினை பராமரித்து வருவதற்காக வழங்கப்பட்டது.

விழாவில் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் அனில் சஹஸ்கர புத்தேஇ துணைத் தலைவர் பூனியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க