• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய மதுபிரியர்கள்

September 11, 2021 தண்டோரா குழு

கோவை பட்டணம் சாலையில் உள்ள நெசவாளர் காலனியில் பகுதியில் அரசு மதுபான கடையின் இயங்கி வருகின்றது. இதன் அருகில் உள்ள மதுக்கூடத்தில் கூட்டமாக ஏராளமானோர் மது குடிப்பதாக வந்த தகவலையடுத்து மாநகராட்சி ஊழியர் ஒருவர் அங்கு சோதனைக்கு சென்றார். அங்கு

குடிபோதையில் இருந்த நபர்கள் மாநகராட்சி ஊழியர் மீது மது பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தவே அவர் சக ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மற்ற மாநகராட்சி ஊழியர்கள், பாட்டிலை கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் மீது வீசிய , குடிபோதையில் இருந்த நபர்களை பிடித்து சிங்காநல்லூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் மாநகராட்சி ஊழியர்களை தாக்கியவர்கள் நெசவாளர் காலணியை சேர்ந்த சுரேஷ் , அசோக்குமார் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

மேலும் படிக்க