• Download mobile app
06 May 2025, TuesdayEdition - 3373
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் விநாயகர் சிலைகள் கரைப்பு

September 10, 2021 தண்டோரா குழு

விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு தடை விதித்தும் வீடுகளில் சிலைகள் வைத்து வழிபட அனுமதி அளித்துள்ளது.

அவரவர் வீடுகளில் வைக்கப்படும் சிலைகளை கரைப்பதற்காக கோவை மாவட்டத்தில் 48 நீர்நிலைகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீர் நிலை கரையோரங்களில் சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிலைகளை கரைக்க வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நின்று கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

கரைகள் தூய்மை செய்யப்பட்டு கிருமி நாசினிகள் பொடிகள் தூவப்படுகிறது. கொண்டுவரப்படும் சிலைகள் அனைத்தும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை யினரால் குளங்களுக்குள் விடப்படுகிறது. நீண்ட நேரம் அங்கு நிற்க காவல்துறையினர் அனுமதிப்பதில்லை.இதற்காக சிலைகள் கரைக்கப்படும் அனைத்து குளங்களிலும் காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க