• Download mobile app
11 Feb 2026, WednesdayEdition - 3654
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரம் !

September 9, 2021 தண்டோரா குழு

கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரமடைந்துள்ளது. சிறிதும் பெரிதுமாக விநாயகர் சிலைகளை வீடுகளில் வைத்து வழிபட பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழா கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறுமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் நாளை விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சாலையோரம் பொதுஇடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அரசு தடைவிதித்துள்ளது.

அதேசமயம் பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடலாம் என்றும், அவ்வாறு வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலையை தனிநபர் எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைத்துக்கொள்ளலாம் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க