• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

September 9, 2021 தண்டோரா குழு

கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் தொடர்ந்து பத்தாவது முறையாக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாமை பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்புமிகு டாக்டர் காளிராஜ் துவக்கி வைத்தார். பல்கலைகழக நாட்டுநல பணி திட்டம்,கோவிட் 19 கண்காணிப்பு குழு, ராமகிருஷ்ணா மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய இதில், மருத்துவக் குழுவினர் பங்கேற்று தடுப்பூசி செலுத்தினர்.

இந்த முகாமில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், நிர்வாகப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர். முன்னதாக நடைபெற்ற முகாம் துவக்க நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் முருகவேல்,கோவிட் கட்டுப்பாட்டு குழு தலைவர் முனைவர் மணிமேகலன்,ராமகிருஷ்ணா மருத்துவமனை கட்டுப்பாட்டு அலுவலர் ராம்குமார்,ஆசிரியர் சங்க கூட்டமைப்பின் தலைவர் முனைவர் வசந்த்,கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் முனைவர் சுரேஷ் பாபு முனைவர் லோகேஷ்வரன்,ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் தாமஸ்,பேராசிரியை ரூபா குணசீலன்,நாட்டுநலபணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அண்ணாதுரை, மருத்துவமனை நாட்டுநல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகதீஸ்வரன்,செய்தி தொடர்பு அலுவலர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பத்தாவது முறையாக நடைபெற்ற இது.முகாமில் இதுவரை சுமார் 3000 பேர் முதல் மற்றும் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க