• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தெற்கு மண்டலத்தில் மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு

September 8, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப்பணிகளை மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை உக்கடம் பெரியகுளத்தில் பேஸ்-1 பகுதியில் 3.85 கி.மீட்டர் தூரத்திற்கு சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் குளக்கரையினை அழகுபடுத்துவதற்காக குளம் புனரமைத்து, சீரமைக்கும் பணிகளையும் குறிச்சி குளத்தை சுற்றி புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப்பணிகளையும் மாநகராட்சி கமிஷனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், உக்கடம் புல்லுக்காடு பகுதியில் 24×7 குடிநீர் திட்டத்தின்கீழ் உக்கடம் பிஎஸ்யுபி பகுதியில் குடிநீர் திட்டப்பணிகளுக்காக ரூ.2.5 கோடி மதிப்பீட்டில், 22 லட்சம் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருவதை ஆய்வு செய்து மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு சமந்தப்பட்டு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, செயற்பொறியாளர் தஞானவேல், தெற்கு மண்டல உதவி கமிஷனர் சுந்தாராஜன். உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி. உதவி பொறியாளர் சரவணக்குமார், 24 மணிநேர குடிநீர் திட்ட மேலாண்மை ஆலோசகர் குழுத் தலைவர் கோபாலகிருஷ்ணன். மண்டல சுகாதார அலுவலர் ராமு மற்றும் உதவி பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க