• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரு நபரை தற்கொலையில் இருந்து காப்பாற்றினால், ஒரு குடும்பத்தை காப்பாற்றுவதற்கு சமம் !

September 6, 2021 தண்டோரா குழு

மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை செய்யும் நபர்களுக்கு தேவையான உளவியல் ஆலோசனை வழங்குவது குறித்து போலீசாருக்கான 2 நாட்கள் பயிற்சி முகாம் கோவையில் தொடங்கியது.

கோவை மாவட்ட பகுதிகளில் தினமும் 3 பேர் வரை தற்கொலை செய்கின்றனர். மன அழுத்தம், குடும்ப பிரச்சினை உள்ளிட்ட பல காரணங்களால் தற்கொலை செய்பவர்களை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சார்பில் கவுன்சிலிங் மையம் கோவையில் உள்ள எஸ்.பி அலுவலகத்தில் துவங்கப்பட உள்ளது.

இந்த மையத்தில் பணிபுரியும் பெண் போலீசாருக்கான 2 நாள் பயிற்சி முகாம் எஸ்.பி அலுவலகத்தில் துவங்கியது.

முகாமை போலீஸ் எஸ்.பி. செல்வநாகரத்தினம் துவங்கி வைத்து பேசியதாவது:-

காதல் தோல்வி, குடும்ப பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் நபர்கள் ஒரு நொடியில் தற்கொலை முடிவை எடுக்கின்றனர். அந்த சமயத்தில் அவர்களுக்கு உரிய உளவியல் ஆலோசனை வழங்கினால், அவர்களை தற்கொலை செய்வதில் இருந்து நாம் தடுக்கலாம்.

ஒரு நபரை தற்கொலையில் இருந்து காப்பாற்றினால், ஒரு குடும்பத்தை காப்பாற்றுவதற்கு சமம். இந்த 2 நாட்கள் பயிற்சி முகாம் முடிந்ததும், போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் ஒரு பகுதியில் கவுன்சிலிங் மையம் துவங்கப்படும். இந்த மையத்தை பொதுமக்கள் 24 மணி நேரமும் அணுகும் வசதி ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க