• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அந்தமானில் சிக்கிய 800 பயணிகளை மீட்க கப்பல்கள்

December 7, 2016 தண்டோரா குழு

அந்தமானில் பெய்து வரும் மழையால் சுமார் 800 சுற்றுலாப் பயணிகள் அங்கு சிக்கியிருக்கின்றனர். அவர்களால் வெளியேற முடியவில்லை.

சிக்கியுள்ள 800 சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற இந்தியக் கடற்படை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 6) மூன்று கப்பல்களை அனுப்பியுள்ளது.

இது குறித்து கடற்படை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் செவ்வாய்க் கிழமை கூறியதாவது:

அந்தமானில் பெய்துவரும் கனமழையால் 800 சுற்றுல்லா பயணிகள் அங்கு இருந்து வெளிவர முடியாத நிலையில் இருக்கின்றனர். அவர்களை அங்கிருந்து பத்திரமாக வெளியேற்ற இந்திய கடற்படை மூன்று கப்பல்களை அனுப்பியுள்ளது.

அந்தமானின் சுற்றுலாத் தலமான ஹவேலோக் கடற்கரை பிரபலமானது. ரிட்சி ஆர்ச்சிபேலேகோ என்னும் தீவுகளின் அமைப்பை உருவாக்க ஹெவ்லொக் தீவுகளின் சங்கிலி முக்கியமானது. அந்த தீவு அந்தமானின் தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ஹவேலோக் தீவில் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகள் போர்ட் பிளேருக்கு கப்பல்கள் மூலம் பாதுகாப்பாக அழைத்துக்கொண்டு வரப்படுவார்கள். அதற்காக பித்ரா, பங்கரம் மற்றும் கம்பீர் ஆகிய கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இவ்வாறு கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க