• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நேரு மஹா வித்யாலயா பள்ளியில், தொடர்ந்து ஐந்தாவது நாளாக நடைபெற்று தடுப்பூசி முகாம்

September 6, 2021 தண்டோரா குழு

கோவை பால்கம்பேனி பகுதியில் உள்ள நேரு மஹா வித்யாலயா பள்ளியில், தொடர்ந்து ஐந்தாவது நாளாக தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது.

கோவை மாவட்டம் பால்கம்பேனி பகுதியில் உள்ள,ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா பள்ளியில், கோவை வெல்பேர் அசோசியேசன், விப்பர் பவுண்டேஷன், மற்றும் ஜித்தோ அமைப்பின் சார்பில் கடந்த நாண்கு நாட்களாக தொடர்ச்சியாக பள்ளி வளாகத்தில்,தடுப்பூசி மூகாம் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று ஜந்தாவது நாளாக, தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகினறது,

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்று வருகின்ற இந்த தடுப்பூசி முகாமில் அந்த பகுதி மக்கள்,ஆரவாரமின்றி வந்து தங்களது ஆதார் எண்களை வழங்கி, பதிவு செய்து தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர், இந்த மூகாம் மூலமாக 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பள்ளி வளாகத்தில் தடுப்பூசி செலுத்த பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடக்க முடியாத மாற்று திறனாளிகளுக்கு மருத்துவரே நேரில் வந்து அவர்களின் வாகனங்களில் வைத்து தடுப்பூசிகளை செலுத்தினர்,இதனால் இந்த பகுதியில் உள்ள அனைவரும் தயக்கமின்றி தடுப்பூசிகளை செலுத்த முன்வந்து செலுத்தி கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கோவை வெல்பேர் அசோசியேசன், மற்றும் ஜித்தோ அமைப்பின் தலைவர் ரமேஷ் பாப்னா, விப்பர் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் சர்வான் போஹரா, மற்றும் கோவை வெல்பேர் அசோசியேசன் செயளாளர், ரமேஷ் சூத்தாலியா, ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கல்லூரி செயலாளர், சுனில் நஹாட்டா, நிர்வாகிகளாகளான, துர்கா ராம், அஜய், நிர்மல் ஷர்மா, லலித் பாட்டி, ஒபாராம், மணீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க