• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 16 லட்ச ரூபாய் நிதி திரட்டி உதவி வழங்கிய சக காவலர்கள்..!

September 6, 2021 தண்டோரா குழு

கோவையில் உயிரிழந்த காவலரின்
குடும்பத்திற்கு சக காவலர்கள் 16 லட்சத்து 53 ஆயிரத்து 265 ரூபாய் குடும்ப உதவி நிதியாக வழங்கினர்.

தமிழ்நாடு காவல்துறையில் உள்ள 2002ம் பேட்ஜை சேர்ந்த காவலர்கள் தொடர்ச்சியாக தங்களின் சக காவலர்களின் குடும்பங்களுக்கு உதவி வருகின்றனர்.இந்த நிலையில் 2002-ம் பேட்ஜில் தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்த சிவகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் பணியில் இருந்த நிலையில் உயிரிழந்தார்.

இப்படியிருக்க அவரின் பேட்ஜை சேர்ந்த சக காவலர் அவரின் குடும்பத்திற்கு உதவ நிதி திரட்டினர். இப்படி சேகரித்த 16 லட்சத்து 53 ஆயிரத்து 265 ரூபாயை நினைவேந்தல் நடத்தி மறைந்த சிவகுமாரின் மகன் மற்றும் மனைவிக்கு 8 லட்சத்து 40 ஆயிரத்து 500 ரூபாயும், தாய் தந்தைக்கு எட்டு லட்சத்து 12 ஆயிரத்து 765 ரூபாய் என பிரித்து வழங்கினர்.

மேலும் படிக்க