• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அம்மாவாசையை முன்னிட்டு பேரூர் மருதமலை உள்ளிட்ட 4 கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

September 6, 2021 தண்டோரா குழு

அம்மாவாசையை முன்னிட்டு அதிக கூட்டம் கூடுவதைத் தவிர்க்க பேரூர் , மருதமலை உள்ளிட்ட 4 கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ,

“கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாகக் கோயில்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் வெள்ளி,சனி, ஞாயிற்று கிழமைகளில் கோயில் நடை மூடப்படும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதவிர ,கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 1 – ம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அமாவாசை நாளான செப்டம்பர் 6 – ம் தேதி கோயில்களில் அதிக கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் பேரூர் பட்டீஸ்வரசுவாமி கோயில்,மருதமலை
சுப்பிரமணியசுவாமி கோயில்,தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.இந்தக் கோயில்களில் சுவாமிக்கு நடைபெறும் பூஜைகள் தொடர்ந்து நடைபெறும் ” என்று ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க