• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயற்சி

September 4, 2021 தண்டோரா குழு

நெல்லையை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 28). கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு கோவை வந்த இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.இவருக்கு கடந்த ஆறு மாதங்களாக ஓட்டல் உரிமையாளர் சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து உரிமையாளரிடம் குமாரசாமி பலமுறை கேட்டும் சம்பளம் கொடுக்கவில்லை. இதனால் செலவுக்கு பணமில்லாமல் குமாரசாமி மிகவும் சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில் டீசல் கேனுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்த இவர் திடீரென கையில் வைத்திருந்த டீசலை தனது உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றார்.

இதனை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தி குமாரசாமியை மீட்டனர். பின்னர் விசாரணைக்காக அவரை ரேஸ் கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க