• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கே.கே.புதூர் மாநகராட்சி பள்ளியில் கமிஷனர் ஆய்வு

September 1, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட கே.கே.புதூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பள்ளியிலுள்ள வகுப்பறை வசதி, கணினி அறை, மின் வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.பின்னர் பள்ளிக்கு வருகை தரும் மாணவ,மாணவிகள் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தியும், முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என பள்ளி ஆசிரியர்களிடம் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையிலுள்ள 20 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தின்கீழ் தொட்டியிலுள்ள நீர் மட்டம், தொட்டியிலிருந்து விநியோகிக்கப்படும் நீரின் அளவு, குழாய்களிலுள்ள நீர் அழுத்தம் ஆகியவற்றை தொடர்ந்து 24 மணிநேரமும் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நவீன கருவிகளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது மாநகர பொறியாளர் லட்சுமணன், மேற்கு மண்டல உதவி கமிஷனர் சிவசுப்பிரமணியன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க