• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது

September 1, 2021 தண்டோரா குழு

பொள்ளாச்சியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்களை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விபச்சாரங்கள் நடக்கா வண்ணம் தனியார் லாட்ஜ்,ரெசார்ட் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கிழக்கு காவல் நிலையத்தில்அம்பராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சூளேஸ்வரன்பட்டி பேருந்து நிலையத்தில் நிற்கும் பொழுது விஜயலட்சுமி என்ற பெண் விபசாரத்துக்கு அழைத்ததாக புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சூளேஸ்வரன்பட்டி நாய்க்கன்பாளையம் அன்னை நகர்ப் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் தனது தோழிகளுடன் விபச்சாரத்தில் ஈடுபடுவது தெரிய வந்தது.

இதையடுத்து விஜயலட்சுமி, பன்பரசி, கோமதிமூவரையும் விபச்சார வழக்கில் கைது செய்து நீதிமன்றம் 1ல்ஆஜர்படுத்தி கோவை 3 பெண்களை சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க