ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் முதல்வாரம் ‘தேசிய ஊட்டச்சத்து வாரமாக’ கொண்டாடப்பட்டு வருகின்றது. அதாவது செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகின்றது.
இதன்படி இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்மாவட்ட அங்கன்வாடி ஊழியர்கள் உருவாக்கி ஊட்டச்சத்து உணவு வகைகளை கலெக்டர் சமீரான் பார்வையிட்டார்.
இது குறித்து அரசு துறை அதிகாரிகள் கூறுகையில்,
வறுமையின் காரணமாக போதிய ஊட்டமின்மையும்,அதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் தொற்று வியாதிகளும் ஏற்படுகின்றன.இதன் மூலம் ஏற்படும் ஆரோக்கிய குறைபாட்டால் அவர்கள் வேலை செய்யும் ஆற்றலும்,உற்பத்தித்திறனும் குறைந்து ஏழ்மை தொடர்கிறது.
இந்த சுழற்சி இந்தியாவில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.இதை தவிர்க ஒரு வாரம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந் நிகழ்வு நடத்தப்படுகிறது.இதை ஒட்டி இன்று புள்ளிகள் திறக்கப்பட்டதால் அரசு பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கபட உள்ளதாக தெரிவித்தனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்